ஐஸ்வர்யா ராய் முன்னாள் கணவர், லாலு மகன்; யார் இந்த தேஜ் பிரதாப் யாதவ்?

Tej Pratap Yadav: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் யார் தெரியுமா?

Published on: May 26, 2025 at 2:50 pm

பாட்னா, மே 26 2025: ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஞாயிற்றுக்கிழமை (மே 25 2025) தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி உத்தரவிட்டார். “பொறுப்பற்ற நடத்தை” காரணமாக தேஜ் பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என கட்சியினர் கூறுகின்றனர்.

முன்னதாக இந்தப் படத்தில் இருப்பவர் அனுஷ்கா யாதவ் என்ற தலைப்பில் சர்ச்சைக்குரிய படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில், தேஜ் பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த தேஜ் பிரதாப் யாதவ்?

தேஜ் பிரதாப் யாதவ் ஏப்ரல் 16, 1988 அன்று பீகாரில் உள்ள கோபால்கஞ்சில் பிறந்தார். இவர் பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவியின் மூத்த மகன் ஆவார். அவரது தம்பி தேஜஸ்வி யாதவ், பீகாரில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராகவும், ஆர்ஜேடி தலைமையின் அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.

தேஜ் பிரதாப் முன்பு நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசாங்கத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சராக பணியாற்றினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் இவரின் அரசியல் வாழ்க்கை சறுக்கலை சந்தித்துவருகிறது. இவர், L-R vlog என்ற யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார். இந்தச் சேனல் சமீபத்தில் 1,00,000 சப்ஸ்கிரைபர்களை கடந்தது.

இவர் பீகார் முன்னாள் முதல்வர் தரோகா ராயின் பேத்தியான ஜஸ்வர்யா ராய் (Aishwarya Roy) என்பவரை திருமணம் செய்தார். 2018ஆம் ஆண்டு நடந்த இந்தத் திருமணம் வெகுநாள்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவகரத்துக்கு விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

தேஜ் பிரதாப் யாதவ் பேஸ்புக் பதிவு

தேஜ் பிரதாப் யாதவ் தனது பேஸ்புக் தளத்தில், “இந்தப் படத்தில் இருப்பவர் அனுஷ்கா யாதவ். நாங்கள் கடந்த 12 வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். நாங்கள் காதலித்து வருகிறோம். பன்னிரு ஆண்டுகளாக உறவில் இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இவர் மீது கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பஞ்சாப்பில் கவுன்சிலர் சுட்டுக்கொலை.. அமிர்தசரஸில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com