சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு 47 ஆண்டுகள் சிறை!

Kerala man gets 47 years in prison: கேரளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 47 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Published on: April 27, 2025 at 6:37 pm

திருவனந்தபுரம், ஏப்.27 2025: கேரளாவின் கோட்டயத்தில் மைனர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 47 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ₹30,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கில், கோட்டயம் சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் V, 41 வயதான சிஜோமோனுக்கு 47 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில், கடந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் கோட்டயத்தில் உள்ள அயர்குன்னம் காவல் நிலையத்தில் சிஜோமோன் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிஜோமோன், வைக்கம் மாவட்டம் செனக்கலையைச் சேர்ந்தவர் ஆவார். இந்த வழக்கில், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அனூப் ஜோஸ் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார்.

அதேநேரம், பால் கே ஆபிரகாம் போக்சோ வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்தார். இந்த சம்பவம் 2024 ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் தாயுடன் இருந்த போது அவர் மாயமாகியுள்ளார்.

இந்த நிலையில், சிஜோமோன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 137(2) (கடத்தல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டத்தின் பிரிவு 10 (மோசமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் மாடல் டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சத்தீஸ்கரில் நமாஸ் செய்ய வற்புறுத்தல்; 7 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டம்.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
Dr. Ramadoss

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டம்.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com