திருப்பதி லட்டின் தரம் குறைவு; பண்டைய காலத்தில் என்ன தண்டனை? கல்வெட்டு தகவல்!

Tirupati Lattu Inscription | திருப்பதி கோவிலில் தரமற்ற இடுபொருட்களை பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தினால் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

Published on: September 23, 2024 at 3:07 pm

Tirupati Lattu Inscription | திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் இடுப்பொருட்களின் தரம் குறைவு சமீபத்திய விவாதத்தை தூண்டி உள்ளது. திருப்பதி லட்டில் கலக்கப்படும் நெய்யில் விலங்கின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை தற்போதைய முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளி கொண்டு வந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை முந்தைய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இவை அரசியல் ரீதியான புகார்கள் என்றும் தனது முதல் 100 நாள் தோல்வியை மறைக்க சந்திரபாபு நாயுடு கையாளும் யுக்தி என்றும் ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார். மேலும் தமது ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் தரமான நெய் கலக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கல்வெட்டு தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த கல்வெட்டில் திருப்பதி கோவிலில் தரம் அற்ற இடுபொருட்கள் பிரசாதத்திற்கு பயன்படுத்தினால் என்ன தண்டனை வழங்கப்படும் என்பன போன்ற விவரங்கள் அதில் அடங்கியுள்ளன. திருப்பதி கோவில் உள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் மன்னர்கள் தங்களது பிறந்த நாளில் கோவிலுக்கு அர்ச்சனைக்காக கொடுக்கப்பட்ட பொருட்கள்; வைர, தங்க, வைடூரியங்கள் பற்றி உள்ளன.

இந்த கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த காலத்தில் திருப்பதிக்கு வழங்கப்படும் பிரசாதங்களிலோ, அல்லது பூஜை சம்பந்தப்பட்ட விவாகரங்களிலோ ஏதேனும் தரமற்ற செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு சமூக விலக்கு என்ற தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சமூக விலக்கு என்பது அவ்வளவு எளிதான தண்டனை அல்ல; இது அவர்களை நாடு, நாதியற்றவர்களாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘லட்டு பிரச்னை விரைவில் முடியும்’: திருப்பதி பக்தர் நம்பிக்கை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com