கோவாவில் ரூ.11.67 கோடி ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல்!

Goa police seize hydroponic: கோவாவில் ரூ.11.67 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published on: March 9, 2025 at 11:20 am

Updated on: March 9, 2025 at 11:21 am

கோவா காவல்துறையினர் ரூ.11.67 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர், இது மாநில வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் ஆகும். பனாஜிக்கும் மபுசாவிற்கும் இடையில் அமைந்துள்ள குய்ரிம் கிராமத்தில் 11.672 கிலோ தடைசெய்யப்பட்ட பொருளுடன் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மாநிலத்தின் காலவ்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “ரூ.11.67 கோடி மதிப்புள்ள 11.672 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் களை பறிமுதல் செய்தோம். கோவாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் இதுவாகும்” என்றார்.

இதையும் படிங்க : நான் கஞ்சா புகைப்பேன்.. சர்ச்சையில் சிக்கிய ஐஐடி பாபா.. வழக்குப்பதிவு!

மேலும், “குற்றம் சாட்டப்பட்டவர் மீது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். இதற்கிடையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதில் போலீசாரின் முயற்சிகளுக்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் மீதான அரசாங்கத்தின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை சாவந்த் மீண்டும் வலியுறுத்தினார். தொடர்ந்து, உளவுத்துறை நெட்வொர்க்குகள் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : நட்சத்திரங்களை ரசித்த இஸ்ரேலிய பெண் பயணி.. பைக்கில் வந்த 3 காமுகர்கள்.. கர்நாடகாவில் நடந்தது என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com