Delhi Election 2025: அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு.. யமுனை நதி குறித்து பேசியது என்ன?

Delhi Election 2025: அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் ஹரியானாவில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: February 4, 2025 at 11:03 pm

Updated on: February 5, 2025 at 12:04 am

FIR against Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த விமர்சனத்துக்கு எதிராக ஹரியானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப். 5, 2025) நடக்கிறது. அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரமும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.இங்கு, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே டெல்லி மும்முனைப் போட்டியைக் காண உள்ளது.
இந்நிலையில், நாளை (பிப்ரவரி 5 ஆம் தேதி) 13,766 வாக்குச் சாவடிகளில் 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில், 83.76 லட்சம் ஆண்கள், 72.36 லட்சம் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலின் போது பாதுகாப்பு மற்றும் நியாயமான வாக்களிப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்காக 220 துணை ராணுவப் படைகள், 19,000 ஊர்க்காவல் படையினர் மற்றும் 35,626 டெல்லி காவல்துறையினர் பணியில் உள்ளனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில், ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் உள்ள ஷாஹாபாத் காவல் நிலையத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்)வின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யமுனை நதி நீர் தொடர்பான அவரது அறிக்கைகள் மற்றும் ஹரியானா அரசுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜ.க புகார்

இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் ஒரு குழு தேசிய தலைநகரில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யமுனை நதி குறித்து கெஜ்ரிவால்..

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் பேச்சுகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றின. அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை நதி விஷமாக மாறிவிட்டது எனப் பேசி இருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவர் அரசியலுக்காக பேசுகிறார் என்றால் அவர் இதுபோன்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

மறுபுறம், பா.ஜ.க இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் செய்கிறார். அவர், ஹரியானா மற்றும் டெல்லி மக்கள் இடையே பகைமையை தூண்டுகிறார் எனக் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com