Delhi | டெல்லியில் இன்று காற்றின் தரம் குறைந்து காணப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Delhi | டெல்லியில் இன்று காற்றின் தரம் குறைந்து காணப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Published on: November 10, 2024 at 12:02 pm
Delhi | டெல்லியின் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை காலை ‘மிகவும் மோசமான பிரிவில்” காணப்பட்டது. தேசிய தலைநகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது. இதற்கிடையில், காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) படி, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) காலை 9 மணிக்கு 355 இல் பதிவு செய்யப்பட்டது.
இதில், பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட AQI நல்லதாகவும், 51 மற்றும் 100 திருப்திகரமாகவும், 101 மற்றும் 200 மிதமானதாகவும், 201 மற்றும் 300 மோசமானதாகவும், 301 மற்றும் 400 மிக மோசமானதாகவும், 401 மற்றும் 450 கடுமையானதாகவும் 450க்கு மேல் கடுமையான பிளஸ் ஆகவும் கருதப்படுகிறது.
டெல்லியில் காற்றின் தரம்
மருத்துவர்கள் அறிவுரை
அப்பல்லோ மருத்துவமனையின் மூச்சுத்திணறல் சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர் டாக்டர் நிகில் மோடி கூறுகையில், வழக்கமான நோயாளிகளைத் தவிர, கடந்த காலங்களில் சுவாசக் கோளாறுகள் இல்லாதவர்களுக்கு மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. பலருக்கும் இந்த அறிவுகுறிகள் தோன்றுகின்றன. சுவாசிப்பதில் சிரமங்கள் இருப்பதை பார்த்தோம். இது போன்ற பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன” என்றார். இதற்கிடையில் சில மருத்துவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : குளிர்பானத்தில் போதை மருந்து: நீட் மாணவி பாலியல் வன்புணர்வு; 2 ஆசிரியர்கள் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com