ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
Published on: November 24, 2024 at 11:07 am
Jharkhand Election Result | மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நவ.20 வாக்கு பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் களமிறங்கின.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 56 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றிபெற்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 24 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மற்றவை ஒரு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பிரியங்கா காந்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com