மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் பெயர் பரிந்துரை

சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Published on: November 18, 2024 at 4:41 pm

Justice D Krishnakumar | மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அந்த பதவிக்கு டி கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி கிருஷ்ணகுமார், ஏப்ரல் 7, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் மே 21, 2025 அன்று ஓய்வு பெற உள்ளார்.

நீதிபதி டி. கிருஷ்ணகுமாரின் பெயரைப் பரிந்துரைக்கும் அதே வேளையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மட்டுமே இருக்கிறார் என்பதையும் கொலிஜியம் எடுத்துரைத்துள்ளது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே வெடித்த கலவரத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் பாதுகாப்பு முகாம்களில் உள்ளனர். சமீப நாட்களாக மீண்டும் வன்முறை அதிகரித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் கம்பெனி படைகள் செல்லும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க டெல்லியில் கடும் மாசு; மறு அறிவிப்பு வரும் வரை.. தொடக்க பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு!

அமலாக்கத் துறை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை.. டெல்லி நீதிமன்றம் Arvind Kejriwal

அமலாக்கத் துறை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை.. டெல்லி நீதிமன்றம்

Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்….

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்.. 10 வீரர்கள் உயிரிழப்பு! Jammu and Kashmir

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்.. 10 வீரர்கள் உயிரிழப்பு!

Jammu and Kashmir: ஜம்மு & காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், படையினரைக் கொண்டு சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 10 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 9 பேர்…

இந்தியா-பாகிஸ்தான் துருப்புகள் துப்பாக்கிச் சூடு.. எல்லையில் பதற்றம்! Jammu Kashmir

இந்தியா-பாகிஸ்தான் துருப்புகள் துப்பாக்கிச் சூடு.. எல்லையில் பதற்றம்!

Jammu Kashmir: இந்திய – பாகிஸ்தான் படைகள் கேரன் பிராந்தியத்தில் சர்வதேச எல்லைக்கோடு பகுதி (LoC) அருகே துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டன. இந்த சம்பவம் ஜனவரி 20-21…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com