உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள்கள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்துக்கு 15 நாள்கள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on: September 26, 2024 at 1:12 pm
Sanjay Raut | மும்பையின் மஸ்கானில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26, 2024) சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ரவுத்துக்கு 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், இந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ரூ.25,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.100 கோடி கழிவறை ஊழலில் ஈடுபட்டதாக ராவுத் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாஜக தலைவர் கிரித் சோமையாவின் மனைவி மேதா கிரித் சோமையா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 500ன் கீழ் சஞ்சய் ராவுத்துக்கு 15 நாள்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கிரித் சோமையா வழக்கறிஞர், “சஞ்சய் ராவுத் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தொடர்பாக 2022ல் புகார் அளிக்கப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க : அக்.4 வரை.. தப்பித்த பூஜா கேத்கர்: டெல்லி ஐகோர்ட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com