பூஜா கேத்கரை அக்.4ஆம் தேதிவரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

February 17, 2025
பூஜா கேத்கரை அக்.4ஆம் தேதிவரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Published on: September 26, 2024 at 12:54 pm
Delhi | Puja Khedkar | சிவில் சர்வீசஸ் தேர்வில் ஓபிசி மற்றும் ஊனமுற்றோர் ஒதுக்கீட்டுப் பலன்களை மோசடி செய்ததாகக் கூறி, முன்னாள் ஐஏஎஸ் பூஜா கேத்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அவரும் ஐஏஎஸ் தேர்வில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் அவரை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது உத்தவில் இருந்து விலக்கு அளிக்கும்படி பூஜா கேத்கர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்.26,2024) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், பூஜா கேத்கரை அக்.4ஆம் தேதிவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மோசடியான ஆவணங்கள் சமர்பிப்பு மூலமாக பூஜா மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் மீதான குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். பூஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பூஜாவுக்கு முன்பிணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திர தாரி சிங், பூஜா கேத்கரை அக்.4ஆம் தேதிவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். பூஜா கேத்கர் வழக்கு நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் ஜே.கே
புதுடெல்லி
இதையும் படிங்க : விடுதலை, விடுதலை, விடுதலை; செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: உச்ச நீதிமன்றம் அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com