12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை.. 59 பேரில் 57 பேர் கைது.. ஷாக்!

kerala Minor girl Rape case : கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: January 20, 2025 at 11:42 am

கேரள மாணவி பலாத்கார வழக்கு : கேரள மாணவி கேரள மாநிலத்தில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் வழக்கில் 57 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இலவும்திட்டா காவல் நிலையத்தில் ஜனவரி 10 ஆம் தேதி, முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து, தற்போது வெளிநாட்டில் உள்ள இருவரைத் தவிர, பட்டியலிடப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் விரிவான விசாரணையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் தலைவர் வி.ஜி. வினோத் குமார் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் கடைசியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி எஸ். அஜிதா பேகம் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு, மாவட்ட காவல் அதிகாரியின் மேற்பார்வையில் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள நான்கு காவல் நிலையங்களில் மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர்.

விசாரணையை முடித்து விரைவில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதே காவல் குழுவின் நோக்கமாகும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பத்தனம்திட்டாவில் உள்ள ஒரு தனியார் பேருந்து நிலையத்தில் சிறுமியைச் சந்தித்தது தெரியவந்துள்ளது.பின்னர் அவர் வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது, ​​இன்ஸ்டாகிராம் மூலம் அவருடன் பழகிய ஒரு இளைஞர் ரன்னியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவர் மேலும் மூன்று பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

2024 ஜனவரியில் காருக்குள் நடந்த சம்பவங்கள் மற்றும் பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் உட்பட குறைந்தது ஐந்து முறை அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது 18 வயதாகும் சிறுமி, 13 வயதிலிருந்தே 62 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனையான மாணவி ஒருவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஆசிரியர் அளித்த தகவலின்பேரில், குழந்தைகள் நலக் குழு நடத்திய ஆலோசனையின் போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.பின்னர், இந்தக்குழு காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க 45 நாளில் ₹.2 லட்சம் கோடி எதிர்பார்ப்பு; மகா கும்பமேளா பிசினஸ் ரிப்போர்ட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com