பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சொகுசு கார் : சிறுமி உட்பட 4 பேர் பலி

Jammu-Kashmir Car Accident | ஜம்மு காஷ்மீரில் பளளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published on: November 7, 2024 at 6:22 pm

Jammu-Kashmir Car Accident | ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மஹோரின் கஞ்சோட் பகுதியில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலையிலிருந்து உருண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் ஒரு சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் மஹோர் தாலுகாவை சேர்ந்த மன்சூர் அகமது(வயது 40) (ஆசிரியர்), அவரது மகள் உல்பத் ஜான்(10), குலாம் மொஹி உத் தின்(42) மற்றும் அவரது பஷீர் அகமது(28) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க நடுவானில் தீப்பிடித்த மிக்-29 போர் விமானம்: பத்திரமாக தப்பித்த இரு விமானிகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com