ஆன்லைன் மூலம் நீட் தேர்வு.. OMR பேப்பர் இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி!

NEET Exam : நீட் தேர்வு இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Published on: May 15, 2026 at 12:57 pm

புதுடெல்லி, மே 15 2026: புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை NEET UG 2026 மறுதேர்வை அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். இந்தத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் (Admit Card) தேர்வர்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் 14-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் கூறினார். தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் தேசிய தேர்வு முகமை வெளியிடும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள OMR தாள்கள் அடிப்படையிலான தேர்வு முறை மாற்றப்பட்டு, வரும் ஆண்டு முதல் கணினி வழித் தேர்வு (Computer Based Test – CBT) முறையில் NEET UG நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தேர்வு முறையில் ஏற்படும் முறைகேடுகளை முற்றிலும் தடுக்கவும், மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் கடின உழைப்பும் திறமையும் வீணாகக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், மோசடி செய்பவர்கள் அல்லது ‘கல்வி மாஃபியா’ என அழைக்கப்படும் சட்டவிரோத குழுக்களின் சதித்திட்டங்களால் எந்த தகுதியான மாணவரும் பாதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், வரவிருக்கும் NEET UG மறுதேர்வை எந்தவித குறையும் இன்றி, வெளிப்படையாகவும் திறம்படவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் நோக்கில், மத்திய கல்வி அமைச்சரின் இல்லத்தில் நேற்று இரவு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்வு மையங்களின் பாதுகாப்பு, வினாத்தாள் பாதுகாப்பு நடைமுறைகள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இம்மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற NEET UG தேர்வு, வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது, வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு.. வழக்கை கையில் எடுத்த சி.பி.ஐ.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com