புதுடெல்லி, ஜூலை 25, 2026: பொதுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை கொண்ட புதிய மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய சட்ட வரைவு, வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் (Fast-Track Courts) அமைப்பதற்கும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கும் வழிவகுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதற்கிடையில், தேர்வு சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேசிய தேர்வு முகமை (NTA)-யில் பணியாற்றிய 47 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அமைப்பில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
மேலும், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் சில அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு அதிரடி… டெல்லி உயர்நீதிமன்றத்தின் உடனடி நடவடிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்