மனைவியை அந்தரங்கமாக படம் பிடித்த இசையமைப்பாளர்: சென்னை போலீசில் புகார்

மலையாள இசையமைப்பாளர் மீது சென்னை போலீசில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

Published on: September 24, 2024 at 6:52 pm

Updated on: September 24, 2024 at 6:53 pm

Malayalam music composer in Chennai | மனைவியை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாக மலையாள இசையமைப்பாளர் எம்.ஆர். ராஜா கிருஷ்ணன் மீது சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டியின் அறிக்க புயலை கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மலையாள இசையமைப்பாளர் எம்.ஆர் ராஜா கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரைப்படங்களுக்கு உலகளவில் பெரிய மசுவு உண்டு.

இந்த நிலையில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளிக்கப்படுவதாக பல்வேறு நடிகைகள், துணை நடிகைகள் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்கள் ஹேமா கமிட்டி மூலமாக ஊடக வெளிச்சத்துக்கு வந்தது.

எனினும் ஹேமா கமிட்டி தொடர்பான முழுமையான அறிக்கை விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து, மலையாள திரைப்பட சங்கமான அம்மா கலைக்கப்பட்டது.

அதன் தலைவர் மோகன் லால் உள்பட அனைவரும் பதவி விலகினர். இந்தப் பாலியல் புகாரில் அம்மா திரைப்பட சங்கத்தில் உள்ள நடிகர் சித்திக் மீதும் புகார்கள் உள்ளன. இவர் மீது திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் இவருக்கு இன்னமும் ஜாமின் வழங்கப்படவில்லை. மேலும், கேரளத்தின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகருமான முகேஷ் மீதும் பாலியல் புகார்கள் உள்ளன.

இவர், நீதிமன்றத்தால் முன்ஜாமின் பெற்றுள்ள நிலையில் இன்று போலீசார் இவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த நிலையில் சென்னையில் மலையாள இசையமைப்பாளர் எம்.ஆர். ராஜா கிருஷ்ணன் மீது அவரது மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்துக் கொண்டு, சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டி பணம் பறிக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து எம்.ஆர். ராஜா கிருஷ்ணன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். M R ராஜா, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பெண்ணின் குளியலறையில் கேமரா பொருத்திய இளைஞர்: கைதானது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com