Rakuls Tea Day Delight : நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு டீ பிரியை என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுவும் அவர் இந்த அளவுக்கு டீயை ரசித்து அருந்துபவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Rakuls Tea Day Delight : நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு டீ பிரியை என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுவும் அவர் இந்த அளவுக்கு டீயை ரசித்து அருந்துபவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Published on: May 21, 2026 at 10:06 am
மும்பை, மே 21, 2026: நடிகை ராகுல் ப்ரீத் சிங், சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு தனது ‘தேநீர்’ பற்றிய அன்பை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர், “மழை நாளில் சாய், பக்கோடா, அமைதியான நேரம் – இதற்கு இணையானது எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங், தேநீரை வீட்டின் நினைவுகள், குடும்ப பிணைப்பு, அமைதி ஆகியவற்றோடு இணைத்துப் பார்க்கிறார். அதாவது, “மா கெ ஹாத் கி சாய்” என்ற சொற்றொடரை அவர் குறிப்பிட்டுள்ளார்; தாயின் கையால் தயாரிக்கப்பட்ட டீ- தான் அவருக்கு உண்மையான ஆறுதல்.

சுருங்கச் சொல்வதென்றால், “மழை நாளில் டீ, பக்கோடா, நீண்ட உரையாடல்கள் – இதுவே எனக்கு சிறந்த தருணம்” என்று அவர் கூறியுள்ளார்.

சாயுடன் சுஜி ரஸ்க் சாப்பிடுவது அவருக்கு பிடித்த பழக்கம் என்றும், இஞ்சி டீ-தான் அவருக்கு மிகவும் பிடித்தது; உடல் நலக்குறைவு இருந்தாலும் இஞ்சி டீ தனக்கு ஆறுதலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கணவர் ஜாக்கி பாக்னானி உடன் அமைதியான நேரத்தில் டீ, பக்கோடா சாப்பிடுவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது எனவும் ரகுல் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ரஜினிகாந்த் படத்தில் நடிகை எடின் ரோஸ்.. கதாபாத்திரம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com