Nayanthara: மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா தனது குடும்பத்தினருடன் விரதம் இருந்தார் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
Nayanthara: மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா தனது குடும்பத்தினருடன் விரதம் இருந்தார் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
Published on: March 6, 2025 at 4:57 pm
சென்னை, மார்ச் 6, 2025: நடிகை நயன்தாரா, திரைப்படத்தில் நடிக்க விரதம் இருந்தார் என சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆர் ஜே பாலாஜி எழுதி இயக்கிய படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நயன்தாரா குறித்து ரகசியம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் அம்மனாக நடிக்கும் நயன்தாரா, ” இந்தப் படத்தில் நடிப்பதற்காக தன் இரு குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் கிட்டத்தட்ட ஒரு மாதம் விரதம் இருந்துள்ளார்” என்றார்.
மேலும் படத்தின் முதல் பாகத்தின் போதும் அம்மனாக நடித்த நயன்தாரா, விரதம் இருந்தார் என்றார். மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் மூக்குத்தி அம்மன் ஆக நயன்தாரா நடிக்கிறார். தொடர்ந்து ரெஜினா , அபிநயா, மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் கன்னட நடிகர் துனியா விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மூக்குத்தி அம்மன் 2, படத்தின் படப்பிடிப்பு இன்று ( மார்ச், 6, 2025) தொடங்கி நடைபெறுகிறது.
இதையும் படிங்க:சர்தார் படப்பிடிப்பு.. நடிகர் காயம்.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com