ஏ.ஆர் ரகுமான் விவாகரத்து வழக்கு, கோடம்பாக்கத்தை கடந்த சில தினங்களாக உலுக்கி வருகிறது.
ஏ.ஆர் ரகுமான் விவாகரத்து வழக்கு, கோடம்பாக்கத்தை கடந்த சில தினங்களாக உலுக்கி வருகிறது.
Published on: November 22, 2024 at 11:21 pm
A.R. Rahman | இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், சாய்ரா பானு விவாகரத்து வழக்கு கோடம்பாக்கத்தை உலுக்கி வருகிறது. இந்த விவகாரம் குறித்து பேசிய ஏ ஆர் ரகுமான், அவர் ( பானு) அன்பானவர்; ஆனால் உடைந்த கண்ணாடி இனி ஒட்டாது” என தெரிவித்துள்ளார்.
இருவரும் தங்களின் பிரிவுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் ஏ ஆர் ரகுமான் மனைவியை பிரிந்த விவகாரம் பூதாகரமாக மாறி உள்ளது. பலரும் பல விதமாக பேசி வருகின்றனர். ஏ ஆர் ரகுமானுக்கு இசைக்குழுவில் ஓர் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையாக விடுத்துள்ள நிலையில், ஏ ஆர் ரகுமானின் மகன் ஆமின் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அதில், ” என் அப்பா ஓர் லெஜெண்ட். பண்பு அன்பு மரியாதை என அனைத்திலும் அவர் ஒரு லெஜெண்டாகவே உள்ளார். அவரைப் பற்றி இப்படி எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி குற்றச்சாட்டுகளை முன் வைப்பது பெரும் வேதனை அளிக்கிறது. இன்னொருவரின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது அதில் உண்மை இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் மனதில் வைக்க வேண்டும். தவறான தகவல் பரப்புவதை தயவு செய்து ஊக்குவிக்காதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏ ஆர் ரகுமான் இசை குழுவில் உள்ள மோகினி டே என்ற பெண்ணுக்கும், ஏ ஆர் ரகுமானுக்கும் பழக்கம் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடும் நிலையில் அவரது மகன் இந்த உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க மனைவியின் விவாகரத்து; ஏ ஆர் ரகுமானின் சொத்து மதிப்பு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com