மின்னணு பொருட்கள் தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடம்.. டிஆர்பி ராஜா!

T R B Raja: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

Published on: January 3, 2026 at 12:16 pm

சென்னை ஜனவரி 3, 2026: மின்னணு பொருட்கள் தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா. இது குறித்து டிஆர்பி ராஜா, ” மத்திய அரசின் மின்னணு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 22 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது; இதில் மூன்று திட்டங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை ஆகும்.

இதன் மூலம் ₹27,166 கோடி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். மேலும் இந்த திட்டங்கள் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி கூறியிருந்தார். அப்போது உலக அளவில் இந்தியாவின் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது என அவர் தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

இதையும் படிங்க; பிப்ரவரியில் பட்ஜெட்.. வளர்ச்சிக்கு முன்னுரிமை.. பிரதமர் மோடி ஆலோசனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com