இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி.. அமெரிக்க வரி விதிப்பு காரணமா?

Share market today: இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிஃப்டி-50, 24,700 புள்ளிகளாக சரிந்துள்ளது.

Published on: September 26, 2025 at 4:18 pm

மும்பை, செப்.26, 2025: இன்றைய வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் முக்கிய பங்கு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி ஆகியவை சரிவை எதிர்கொண்டன.இது தொடர்ந்து ஆறாவது அமர்வுக்கு சரிவை ஏற்படுத்தியது.

ஏனெனில், மருந்து மீதான வரிகள் மற்றும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (எஃப்பிஐ) இடைவிடாத விற்பனை முதலீட்டாளர்களின் உணர்வைப் பாதித்தது.

இதற்கிடையில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் 450.61 லட்சம் கோடியாகக் குறைந்தது, இதன் விளைவாக முதலீட்டாளர்களின் செல்வம் ₹6.73 லட்சம் கோடி அளவுக்குக் குறைந்தது.

அதாவது, இன்றைய பிற்பகல் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் அல்லது 0.98% சரிந்து 80,360 ஆகக் குறைந்து காணப்பட்டது.இதற்கிடையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 252 புள்ளிகள் அல்லது 1.01% சரிந்து 24,638.40 ஆகக் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரூ.500 இருந்தால் போதும்.. Paytm மூலம் SIP முதலீடு.. புதிய NFO அறிமுகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com