Mutual fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி வீதம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் 12 சதவீத ரிட்டனில் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
Mutual fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி வீதம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் 12 சதவீத ரிட்டனில் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: April 16, 2025 at 2:24 pm
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடந்த காலத்தை விட தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரித்து காணப்படுகின்றன. அதிலும், எஸ்.ஐ.பி அறிமுகத்துக்கு பின்னர், முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எளிதில் முதலீடு செய்கின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பொறுத்தவரை லம்ப்சம் மற்றும் எஸ்.ஐ.பி ஆகிய திட்டங்கள் உள்ளன. இதில், லம்ப்சம் எனப்படுவது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக முதலீடு செய்வது ஆகும். இந்த நிலையில், மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு முதல் 15 ஆண்டுகளில் 12 சதவீத ரிட்டனில் எவ்வளவு வருவாய் பெற முடியும் என்பது குறித்த பார்க்கலாம்.
பொதுவாக எந்தவொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துக்கும் சான்றளிக்கப்பட்ட உறுதியான வருமான வாய்ப்புகள் இல்லை. ஆகவே நாம் 12 சதவீத ரிட்டன் என கணக்கெடுத்துள்னோம்.
மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு
அந்த வகையில், 180 மாதங்கள் (15 ஆண்டுகள்) முதலீடு செய்தால் நீங்கள் செய்த முதலீடு ரூ.9 லட்சமாக இருக்கும். இதில், 12 சதவீதம் ரிட்டன் கிடைத்தால் உங்களுக்கு கிடைக்கும் வருவாய் தோராயமாக ரூ.25.23 லட்சமாக காணப்படும்.
இதேபோல் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 7.5 ஆண்டுகள் முதலீடு செய்தால் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.9 லட்சமாக காணப்படும். அதேநேரம் நீங்கள் ரூ.14.63 லட்சம் தோராயமாக ரிட்டன் பெறுவீர்கள்.
இதையும் படிங்க : பஞ்சாப் நேஷனல் வங்கியில் எஃப்.டி வட்டி குறைப்பு; புதிய வீதத்தை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com