அதானி மீதான அனைத்து குற்றவியல் வழக்குகளும் தள்ளுபடி.. அமெரிக்க நீதிமன்றம்

Gautam Adani: இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீதான அனைத்து குற்றவியல் வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published on: August 11, 2026 at 12:27 pm

புதுடெல்லி, ஆக.11, 2026: அமெரிக்க நீதிமன்றம் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் அவர்களது கூட்டாளி வினீத் ஜெயின் மீது தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது. பத்திரங்கள் மற்றும் மின்னணு மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ் ‘மீண்டும் விசாரிக்க முடியாத வகையில்’ தள்ளுபடி செய்தார். இதன் மூலம், அவர்களைச் சுற்றியிருந்த நீண்ட சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அமெரிக்க நீதித்துறை, வழக்குகளைத் தொடர்வதை நிறுத்துவதற்கான முடிவில் உள்ள “முறைகேடுகள்” குறித்தும் நீதிபதி தனது தீர்ப்பில் கவலை தெரிவித்தார். அதேவேளையில், அதானிகளுக்கும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கும் இடையிலான சமரச ஒப்பந்தம் நீதிமன்றத்தில் இறுதி செய்யப்பட்டது. இதன்படி, அதானிகள் தங்கள் மீது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல், 18 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கத்திற்கு செலுத்தி, சிவில் பத்திர மோசடி குற்றச்சாட்டுகளைத் தீர்த்துக்கொண்டனர்.

அதானி குழுமம் மற்றும் அதன் கூட்டாளிகள், இந்திய அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 265 மில்லியன் டாலர் மதிப்பிலான லஞ்ச ஊழல் திட்டத்தில் ஈடுபட்டதாக 2024 நவம்பரில் அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பொய் சொல்லி, அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கிற்கான ஆதாரங்களை அழித்து விசாரணைகளுக்கு தடையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, மே மாதத்தில் அமெரிக்க நீதித்துறை, அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மேலும் சட்ட நடவடிக்கைகளைத் தொடரப்போவதில்லை என்று நீதிமன்றத்திடம் தெரிவித்தது. அமெரிக்காவின் முதன்மை இணை துணை அட்டர்னி ஜெனரல் ட்ரெண்ட் மெக்கோட்டர், இந்த வழக்கு பெரும்பாலும் இந்தியாவில் நடந்த விஷயங்களை கையாண்டதாகவும், இது உள்நாட்டு வளங்களை வேறு திசைக்குத் திருப்பியதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான அதானி குழுமத்தின் முன்மொழிவு, நீதித்துறையின் இந்த முடிவில் முக்கிய பங்காற்றியதாக ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 28% முதல் 46% வரை குறைந்த விலையில் 4 மிட்-கேப் ஹோட்டல் பங்குகள்.. முதலீட்டாளர்களே நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com