புதுடெல்லி, பிப்.5, 2026: காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ரயில்வே இணை அமைச்சரான ரவ்நீத் பிட்டு சிங்கை பார்த்து துரோகி என விமர்சித்தார்.
இதனை சீக்கியர்களுக்கு எதிரான அவமரியாதை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, “அவரது அகங்காரம் உச்சத்தில் உள்ளது. காங்கிரஸை விட்டு சென்ற மற்றவர்களை பார்த்து அவர் அவ்வாறு கூறவில்லை. சீக்கியரை பார்த்துதான் அவ்வாறு கூறினார்.
இது சீக்கியர்களுக்கு அவமரியாதை; குருமார்களுக்கு அவமதிப்பு. மேலும், இது காங்கிரஸில் சீக்கியர்களுக்கு எதிராக நிறைந்திருக்கும் வெறுப்பின் வெளிபாடு. அவர் (ராகுல் காந்தி) துரோகி என கூறியவர் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பத்தை சேர்ந்தவர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “மேலும், “அவர் தனது அரசியல் சிந்தனையை மாற்றியதற்காக துரோகியா? இது சிறிய சொல் அல்ல. ஒரு குடிமகனை துரோகி என அழைப்பதை நாடு எப்படி சகித்துக் கொள்ளும்? இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸை மூழ்கடிப்பார்கள்” என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு.. மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்!
Assembly election 2026: ” திமுக கூட்டணியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பயணிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவனுக்கு 2026 சட்டமன்ற…
Assembly election 2026: திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு.க ஸ்டாலினிடம் பேசி சுமூகமுறையில் தீர்வு காண முயற்சிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்…
Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார் சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம்….
Sarathkumar: சென்னையில் நடிகர் சரத்குமார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்; அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….
Assembly Election 2026: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்….