புதுடெல்லி, ஆக.26 2025: அடுத்த 40-50 ஆண்டுகள் பாரதிய ஜனதா ஆட்சிதான் என்பது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எப்படி தெரியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
பீகாரில் ராகுல் காந்தி பரப்புரை
பீகார் மாநிலம் மதுபானி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், “அமித் ஷாவின் பேச்சை பாருங்கள்.
அடுத்து 40-50 ஆண்டுகள் வரை பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் எனக் கூறுகிறார். இது அவருக்கு எப்படி தெரியும்? இதற்கும் வாக்கு திருட்டுக்கும் தொடர்பு உள்ளது. அமித் ஷாவின் கூற்று உங்களுக்கு வித்தியாசமாக இல்லையா? அது இயல்புக்கு மாறாக உள்ளது” என்றார்.
மேலும், “அடுத்த 40-50 ஆண்டுகள் வரை பா.ஜ.க ஆட்சிதான் என அவரால் எப்படி கூற முடியும்?” என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, “நான் பொய் கூறவில்லை; வாக்கு திருட்டுக்கு பின்னால் உள்ள உண்மை என்ன? அது மக்களுக்கு தெரிய வேண்டும்” என்றார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பாரதிய ஜனதா மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டில், பாரதிய ஜனதா வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பிரமாண பத்திரம் or மன்னிப்பு.. ராகுல் காந்திக்கு சிக்கலான ‘வாக்கு திருட்டு’!
Actress Aishwarya Lakshmi on Vijay : நான் கேரளத்தில் இருக்கிறேன்; எனக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வருந்தியுள்ளார்….
Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….
Palk Strait swimme Ishank Singh :
ஏழு வயது இஷாங்க் சிங், பால்க் ஜலசந்தியைக் கடந்த மிக இளம் வயது நீச்சல் வீரர் என்ற பெருமையைப்…
Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்….
Velmurugan Alleges Vijay : விஜய் மேனேஜர் என்னிடம் பேரம் பேசினார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்….
Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்….