Kanyakumari | முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கோவில் கொண்டுள்ள பகவதி அம்மன் திருக்கோவிலின் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை திருக்கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்கு தினம்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் சில பக்தர்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம். மேலும் சில பக்தர்கள் கன்னியாகுமரியில் தரிசனம் செய்து விட்டு ஐயப்ப சுவாமியை காண செல்வதும் வழக்கம்.
இதனால் கன்னியாகுமரியில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நற்செய்தியாக, குமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பர்கள் 12 30 மணிக்கு சாத்தப்படும். அதேபோல், மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூடப்படும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக நண்பகல் அரை மணி நேரமும் இரவு அரை மணி நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் நடை ஆனது நண்பகல் 1:00 மணிக்கும் இரவு 9:00 மணிக்கு சாத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….
Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்….
Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்….
IMD Rain Alert : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்று (மே 2, 2026) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்