பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருது; டொமினிகா அறிவிப்பு!

கோவிட் தொற்றின் போது உதவியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா மிக உயர்ந்த தேசிய விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது.

Published on: November 14, 2024 at 3:20 pm

Dominica | கோவிட்-19 (COVID-19)பெருந்தொற்றின் போது மலைப்பாங்கான கரீபியன் தீவு தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளது.

நவம்பர் 19 முதல் 21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறவுள்ள இந்தியா-கேரிகாம் (கரீபியன் சமூகம்) உச்சி மாநாட்டின் போது டொமினிகன் அதிபர் சில்வானி பர்டன் பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்க உள்ளார்.

இதுகுறித்து டொமினிகாவின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 இன் போது டொமினிகாவிற்கு பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, டொமினிகா காமன்வெல்த் தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை வழங்கவுள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 2021 இல் 70,000 அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியை டொமினிகாவிற்கு பிரதமர் மோடி எவ்வாறு வழங்கினார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொமினிகா மற்றும் பரந்த பிராந்தியத்துடன் பிரதமர் மோடியின் ஒற்றுமைக்கு டொமினிகாவின் நன்றியின் வெளிப்பாடே இந்த விருது என்று டொமினிகன் பிரதமர் ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க இந்து பெண் துளசி கப்பார்டுக்கு முதன்மை பதவி ; டிரம்ப் அறிவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com