Kasthuri controversial speech | சர்ச்சை பேச்சு தொடர்பான நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Kasthuri controversial speech | சர்ச்சை பேச்சு தொடர்பான நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on: November 14, 2024 at 12:19 pm
Kasthuri controversial speech |தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி நவபர் 3ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் நடிகை கஸ்தூரி (50) கலந்து கொண்டார். அப்போது தெலுங்கர்கள் குறித்து அவர் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சை ஆகின.
தொடர்ந்து இந்த கருத்துக்களை திரும்ப பெற்ற நடிகை கஸ்தூரி, “தெலுங்கர்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல; எனது கருத்துக்களை முழுமையாக நான் திரும்பப் பெறுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை எழும்பூரிலும், மதுரை திருநகர் காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது கஸ்தூரி ஏற்கனவே தலைமறைவாகி விட்டார். செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம், இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க ‘நான் பேசியதை திரித்து பொய் பரப்புரை’: நடிகை கஸ்தூரி ஆதங்கம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com