RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: October 30, 2024 at 9:56 am
RMC Chennai | தென்தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
30.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2024 மற்றும் 04.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
29.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
30.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
31.10.2024 (தீபாவளி தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க பசியில் காத்திருக்கும் பறவைகள்; மறைந்திருக்கும் 4 கிவி பழங்கள்: சரியா கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி!
சென்னை, ஜூலை 3 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை (ஜூலை 2 2025) விடுத்திருந்த அறிக்கையில், “இது தமிழ்நாடா… இல்லை காடா? என கேள்வியெழுப்பி இருந்தார்.
மேலும் அந்த அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, “ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் மணல் கொள்ளையர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அவர்கள் துணிச்சல் பெற்று செய்தியாளரைத் தாக்குவதற்கு காரணமாகியுள்ளது.
ஒருபுறம் காவல் நிலைய மரணம், இன்னொரு புறம் செய்தியாளர்கள் மீது தாக்குதல், கட்டுப்படுத்தப்படாத பட்டாசு ஆலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது தமிழ்நாடா… இல்லை காடா? என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “செய்தியாளர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஒரு மாநிலத்தில் நிலவும் என்றால் அங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்று தான் பொருள். தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் செய்தியாளரைத் தாக்கிய செம்மண் கடத்தல் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது; ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஜூலை 3 2025: சென்னையில் இன்று (வியாழக்கிழமை) தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு காணப்பட்டது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.9,105 ஆகவும்; ஒரு பவுன் (8 கிராம்) ரூ.72 ஆயிரத்து 840 ஆகவும் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ.9,065 ஆகவும் ஒரு பவுன் கிராம் ரூ.72,520 ஆகவும் விற்பனையானது. ஆக, பவுனுக்கு தங்கத்தின் விலையில் இன்று ரூ.320 உயர்வு காணப்படுகிறது.
24 காரட் தங்கம்
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.9,933 ஆகவும்; ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்து 464 ஆகவும் விற்பனையாகியுள்ளது.
வெள்ளி விலை அதிகரிப்பு
வெள்ளியை பொறுத்தமட்டில் இன்று கிராம் ரூ.121 ஆக காணப்படுகிறது. அந்த வகையில் கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 21 ஆயிரமாக விற்பனையாகி வருகிறது. நேற்று கிராம் வெள்ளி ரூ.120 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.1, 20, 000 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.15 ஆயிரம் எஸ்.ஐ.பி., ரூ.21 லட்சம் ரிட்டன்.. டாப் 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஜூலை 3 2025: போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களில் பணத்தை சேமித்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு பெரிய நிவாரணமாக, ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசாங்கம் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய வட்டியை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.பி.எஃப் உள்ளிட்ட அஞ்சலக திட்டங்களின் வட்டி விகிதம்
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY): இந்தத் திட்டம் 8.2% என்ற மிக உயர்ந்த வருமானத்தைத் தொடர்ந்து வழங்குகிறது. இது உங்கள் பெண் குழந்தைக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்: 3 ஆண்டு அஞ்சல் அலுவலக கால வைப்புத்தொகை உங்களுக்கு 7.1% வட்டி கிடைக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): பி.பி.எஃப் (PPF) வட்டி விகிதம் 7.1% இல் மாறாமல் உள்ளது.
அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு: அஞ்சல் அலுவலகம் தொடர்ந்து 4% விகிதத்தை வழங்கும்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): கே.வி.பி (KVP) உங்களுக்கு 7.5% வழங்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): இது 7.7% வழங்குகிறது. நிலையான வருமானத்தைத் தேடும் ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS): இந்தத் திட்டம் தொடர்ந்து 7.4% வட்டியை வழங்குகிறது. இது வழக்கமான வருவாயை எதிர்நோக்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல தேர்வாக உள்ளது.
இதையும் படிங்க : லேட்டஸ்ட் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
இன்றைய ராசிபலன்கள் (3-07-2025): எந்த ராசிக்கு நேரம் உங்கள் பக்கம் இருக்கிறது? எந்த ராசிக்கு வீட்டில் பதற்றம்? 12 ராசிகளின் (3-07-2025) பலன்கள் என்ன? இதில் வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை பணியிடம் தொடர்பான பல்வேறு கணிப்புகள் உள்ளன.
மேஷம்
நீண்ட கால தனிப்பட்ட மற்றும் தொழில்முறை குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும். மேலும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை முன்னேற்றத்தின் வாக்குறுதியை அளிக்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வியாபாரம் உங்கள் சக்தியை மீண்டும் ஒருங்கிணைக்கும். நீண்ட காலமாக தாமதமாகி வரும் திட்டங்களின் மீது கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
உங்கள் உணர்ச்சிப் பார்வையில் மாற்றம் வரக்கூடும். கடந்த கால உறவுகளில் ஏற்பட்ட ஏமாற்றங்களும் நம்பிக்கையின்மையும் உங்களை சோர்வடையச் செய்திருக்கலாம், ஆனால் இதெல்லாம் மாற தற்போது தயாராக உள்ளது. ஒரு அர்த்தமுள்ள புதிய தொடர்பு அல்லது தோழமை சந்திப்புக்கு வாய்ப்புள்ளது. இது உங்களின் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைக் கொண்டுவரக்கூடும்.
மிதுனம்
இன்று மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் பற்றிய உங்கள் கருத்தை மாற்றலாம். துரோகம் அல்லது ஏமாற்றம் போன்ற உணர்வுகள் எழக்கூடும். குறிப்பாக உங்கள் அர்ப்பணிப்பு கவனிக்கப்படாவிட்டால் எச்சரிக்கையுடன் இருங்கள். நம்பிக்கையை கைவிட வேண்டாம். சாதகமான நாள்.
கடகம்
இந்த நாள் கொண்டாட்ட உணர்வையும் மகிழ்ச்சி நிவாரணத்தையும் தருகிறது. ஆழமாக விரும்பிய ஒன்றுக்காக நீங்கள் காத்திருக்க நேரிடலாம். ஒருவேளை ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பு அல்லது மீண்டும் இணைவதற்கான சந்திப்பு உங்களுக்கு வரக்கூடும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நீங்கள் இறுதியாக உற்சாகமான செய்திகளைப் பெறலாம். நெருங்கிய நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்களுடன் கூடி மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க இது ஒரு நேரமாக இருக்கலாம்.
சிம்மம்
குறிப்பாக இடமாற்றம் அல்லது நீண்டகால லட்சியங்கள் தொடர்பான சில இலக்குகள் அதிக நேரம் எடுத்துக் கொள்ள நேரிடும். அந்த வகையில், பொறுமை இறுதியில் பலனளிக்கும். கடந்த கால தாமதங்களை விட்டுவிட்டு, வரவிருக்கும் பணிகளை தெளிவுடனும் உறுதியுடனும் அணுகவும். உங்கள் மீது நம்பிக்கையைப் பேணுங்கள், உண்மையிலேயே முக்கியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்.
கன்னி
இன்றைய ஆற்றல் தீர்க்கப்படாத குடும்ப விஷயங்களிலிருந்து தொடங்குகிறது. மனம் தளர வேண்டாம். இறுதியில் உங்கள் குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் வழி நிற்பார்கள். எனினும், மோதலைத் தவிர்ப்பதற்காக உங்களிடமிருந்து மறைக்கப்பட்ட சொத்து அல்லது நம்பிக்கை பதற்றங்களை கொடுக்கலாம். வீட்டிலும் வாழ்க்கையின் பிற பகுதிகளிலும் நீங்கள் தனிமை அல்லது நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதை உணரலாம்.
துலாம்
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு சந்திப்பு அல்லது திட்டம் ஒன்று சேரலாம். இது மன அழுத்தத்திலிருந்து தற்காலிகமாக தப்பிக்க உதவுகிறது. வாழ்க்கையின் இலகுவான பக்கத்தில் நீங்கள் இருக்கட்டும், தோழமை மற்றும் பகிரப்பட்ட மகிழ்ச்சி கொண்டு வரக்கூடிய உணர்ச்சி ஆறுதலை அனுபவிக்கவும்.
விருச்சிகம்
வீட்டில் பதற்றம் அல்லது தனிமை உணர்வுகள் தீர்க்கப்படாத கடந்த கால பிரச்னைகள் தோன்றக்கூடும். விளக்கம் கொடுக்கும் நேரமும் இதுவல்ல; பொறுமைக்கான நேரம் இது. விமர்சனங்கள் அல்லது ஆத்திரமூட்டல்களுக்கு கடுமையாக எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்கவும்; அதற்கு பதிலாக, உள் சமநிலையை மீண்டும் பெறுவதில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு
நிலையாக இருங்கள், மற்றவர்களின் வஞ்சகம் அல்லது தவறான புரிதல்கள் உங்கள் உள் அமைதியைக் கெடுக்க அனுமதிக்காதீர்கள். பொறுமையாக இருங்கள், உண்மை வெளிப்பட அனுமதிக்கவும். உங்கள் சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தவும். நீங்கள் கடினமாக உழைத்தது அங்கீகாரத்தையும் வெகுமதியையும் கொண்டுவரும். உங்கள் நேர்மையை அப்படியே வைத்திருங்கள், நேரம் உங்கள் பக்கம் இருக்கிறது என்று நம்புங்கள்.
மகரம்
உணர்ச்சி மன அழுத்தம் இன்று உங்கள் பார்வையை மறைக்கக்கூடும், குறிப்பாக எதிர்பார்ப்புகள் யதார்த்தத்துடன் பொருந்தாத சூழ்நிலைகளில். உறவுகளிலும் வேலையிலும் சமீபத்திய மோதல்கள் அல்லது ஏமாற்றங்களால் நீங்கள் சுமையாக உணரலாம். எனினும் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து வாய்ப்புகள் வரும்.
கும்பம்
உங்கள் நோக்கங்களையும் செயல்களையும் சீரமைக்க வேண்டிய நேரம் இது, பெரிய லட்சியங்களை நோக்கி சீராக வேலை செய்ய சிறிய, அடையக்கூடிய இலக்குகளை முதலில் அமைக்கவும். சமநிலை மற்றும் குழுப்பணி உங்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும். உள் நம்பிக்கையும் ஆன்மீக அடித்தளமும் வலுவடைந்து, உங்கள் பாதையை அதிக தெளிவுடனும் நோக்கத்துடனும் வழிநடத்துகின்றன.
மீனம்
மனக்கிளர்ச்சியான எதிர்வினைகளைக் கட்டுப்படுத்துவதிலும், தற்போதைய சூழ்நிலைகளை பொறுமையுடனும் நிதானத்துடனும் அணுகுவதிலும் முக்கியம். அவசரமாகச் செயல்படுவது ஏற்கனவே தீர்வுக்கான பாதையில் உள்ளதை சீர்குலைக்கக்கூடும். உங்கள் அடுத்த படிகளை வழிநடத்த நேரத்தையும் தெளிவையும் அனுமதிக்கவும், கவனமாகக் கையாண்டால் முன்னேற்றம் சாத்தியமாகும்.
இதையும் படிங்க:. இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் : எங்கெங்கு அமைந்துள்ளன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை ஜூலை 2 2025: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்தபின் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது வைகோ, ” இந்துத்துவ சனாதன சக்திகள் திராவிட இயக்கத்தை அழிக்க செயல்படுகின்றன; ஆனால் அவர்களால் ஒருபோதும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” என்றார்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைமையில் தனது கட்சி தேர்தலை சந்திக்கும் என கூறினார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரான வைகோ பதவி இந்த ஆண்டோடு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், தேர்தல் நேரத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்பி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதா? டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com