புதுச்சேரி ; மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து வைத்த முதல்வர் ரங்கசாமி

Puducherry | புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.

Published on: October 21, 2024 at 10:07 pm

Puducherry | பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட்டு மாதம் பட்ஜெட் கூட்டத்தில் விரைவில் ரேசன் கடைகள் திறக்கப்படும்’ என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். தொடர்ந்து ரேஷன் கடைகள் திறக்க ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார்.

முதல் கட்டமாக அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தீபாவளி பரிசாக 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ரேஷன் கடை திறப்பு விழா மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடைபெற்றது. ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் ரேஷன் கடையை திறந்து வைத்து, இலவச அரிசி, சர்க்கரையை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இலவச அரிசி வழங்குவதில் ஆளும் அரசுக்கும், அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இலவச அரிசிக்கு பதிலாக நேரடி பணப்பரிமாற்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி கிலோ அரிசிக்கு ரூ. 30 நிர்ணயம் செய்யப்பட்டு, சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோவுக்கு ரூ.600, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலை அதிகரித்து வருவதால், பணத்துக்கு பதிலாக மீண்டும் ரேசன் அரிசி வழங்க வேண்டும் என புதுச்சேரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க புதுச்சேரி ; வந்தது புதிய உத்தரவு ; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com