Chennai | சென்னையில் தாறுமாறாக ஓடிய காரால் 6 பேர் பலத்த காயமுற்றனர்.
Chennai | சென்னையில் தாறுமாறாக ஓடிய காரால் 6 பேர் பலத்த காயமுற்றனர்.
Published on: October 19, 2024 at 6:24 pm
Chennai | சென்னை எழும்பூரில் கார் ஒன்று இன்று தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியது. இந்தக் கார் சாலையில் ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில் சிக்கி 6 பேர் காயமுற்றனர்.
இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
மேலும், காருக்குள் இருந்த நபர்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னையின் முக்கிய சாலையில் நடந்த இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் காரில் உகாண்டா தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டப்ட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க கோவில்பட்டி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ; பத்திரிக்கை உரிமையாளர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com