New Delhi | சத்யேந்திர ஜெயின் மே 30, 2022 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.
New Delhi | சத்யேந்திர ஜெயின் மே 30, 2022 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.
Published on: October 18, 2024 at 8:15 pm
New Delhi | டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18, 2024) பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி அமைச்சரவையின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு “விசாரணை தாமதம்” மற்றும் “நீண்ட சிறைவாசம்” ஆகியவற்றைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின், அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், சத்யேந்திர ஜெயின் மே 30, 2022 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அப்போது, “அவரை மேலும் காவலில் வைத்திருப்பதால் எந்த நோக்கமும் ஏற்படாது” என்று ஜெயின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
விசாரணையில் தாமதம் மற்றும் 18 மாதங்கள் நீண்ட சிறைவாசம் மற்றும் விசாரணை தொடங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர் நிவாரணத்திற்கு பொருத்தமானவர் எனவும் அவர் வாதிட்டார்.
இந்த நிலையில் “விசாரணை தாமதம்” மற்றும் “நீண்ட சிறைவாசம்” ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நீதிபதி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ‘பெயில் விதி, சிறை விதிவிலக்கு’; அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: உச்ச நீதிமன்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com