Kerala | Kannur | சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) தலைவரும் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான PP திவ்யா ஒரு பொது நிகழ்ச்சியில் கண்ணூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நவீன் பாபு பற்றி விமர்சித்த ஒரு நாள் கழித்து, அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். பாபுவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தனம்திட்டாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக அவர் புதிய பொறுப்பை ஏற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்துள்ளது.
மார்க்சிஸ்ட் திவ்யா பேச்சு
முன்னதாக, கண்ணூரில் திங்கள்கிழமை நடந்த பாபுவின் பிரியாவிடை நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டன் அவரை கவுரவித்தார். இந்த விழாவில் திவ்யா கலந்துகொண்டு, பாபுவின் பதவிக்காலம் குறித்த தனது விரக்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
அப்போது திவ்யா, “வேறு மாவட்டத்திற்குச் செல்லும் கூடுதல் மாஜிஸ்திரேட்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து, “தொழில்முனைவோர் (எரிபொருள் விற்பனை நிலைய விண்ணப்பதாரர்) பலமுறை என்னிடம் வந்து பிரச்னைகளை கூறுவார்கள். ஆனால் மாஜிஸ்திரேட் தடை இல்லா சான்றிதழ் வழங்கவில்லை. ஜிக்ஜாக் சாலையில் பிரச்னைகள் இருப்பதாக கூறினார்” என்றார்.
காங்கிரஸ் வலியுறுத்தல்
கண்ணூரில் உள்ள சி.பி.எம். திவ்யா சிபிஐ(எம்) மகளிர் பிரிவான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திவ்யா மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாபுவின் மனைவி மஞ்சுஷா, பத்தனம்திட்டா மாவட்டம், கொன்னியில் தாசில்தாராகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Kerala : கேரளத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 469 மீனவர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். மேலும், 160 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது….
Kerala High Court: 2017 கேரள நடிகை மானபங்க வழக்கில் குற்றவாளிகள் இருவரின் தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைக்க மறுத்துவிட்டது….
Red alert Kerala : கேரளத்தின் வயநாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது; நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்….
Sabarimala Temple: கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் கோயில் மாதப் பூஜைகளுக்காக நாளை (ஜூன் 14, 2026) திறக்கப்படுகிறது….
Kerala on Heavy Rain Alert: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்