Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்.

October 19, 2025
Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்.
Published on: October 14, 2024 at 10:56 pm
Tirunelveli |நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் எதிர்பாராத விதமாக மோதி, கண்டெய்னரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தின பூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் அவருடன் வந்த அவரது மகன் ரமேஷ் படுகாயங்களுடன் கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com