கணவனை கொலை செய்த மனைவி; அவள் அப்படித்தான்: விறுவிறுப்பான தொடர்!

Aval Appadithan serial | அவள் அப்படித்தான் தொடர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Published on: October 11, 2024 at 7:02 am

Aval Appadithan serial | ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர் ‘அவள் அப்படித்தான்’. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் ,கமலேஷ், மௌலி , பிர்லா போஸ், விஜய் குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

தனது கணவன் பிரேமை கொலை செய்த குற்றத்திற்காக தமிழ்ச்செல்வி சிறை செல்கிறாள். இந்தச் செயலால் அவளது மொத்த குடும்பமும் அவளை கைவிடுகிறது. அவளது கைக்குழந்தையை வளர்க்கவும் அவர்கள் முன்வரவில்லை. ஆகவே அக்குழந்தை வாடகை தாய் மூலம் வளர கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. மகிழ்ச்சியான பிரேம்- தமிழ்ச்செல்வியின் இல்லற வாழ்வில் அப்படி என்ன நடந்தது? ஏன் தமிழ்ச்செல்வி தனது கணவனை கொலை செய்தாள்?

உண்மையிலேயே அந்த கொலையை அவள்தான் செய்தாளா? அவளது குழந்தையின் நிலைமை என்ன ஆனது? சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் பல திருப்பங்கள் நிறைந்த அவள் அப்படித்தான் மெகா தொடரை ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com