மீனவர்கள் மீது அடக்குமுறை; அக்.8 இலங்கை தூதரகம் முற்றுகை: பா.ம.க அறிவிப்பு

PMK Sri Lanka embassy blockade protest | மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து பாமக சார்பில் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

Published on: October 3, 2024 at 10:57 am

Updated on: October 3, 2024 at 10:59 am

PMK Sri Lanka embassy blockade protest | பாமக சார்பில் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சிங்களக் கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து மீனவர்களுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது.

அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்” எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து, “முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி – பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

5 லட்சம் அரசு பணியிடங்கள் காலி.. எப்போது நிரப்புவீங்க? அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

5 லட்சம் அரசு பணியிடங்கள் காலி.. எப்போது நிரப்புவீங்க? அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அவற்றை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுத்து இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என…

தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பை தொடங்குக.. மருத்துவர் அன்புமணி Anbumani Ramadoss

தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பை தொடங்குக.. மருத்துவர் அன்புமணி

Anbumani Ramadoss : “தமிழ்நாட்டிலும் சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

பா.ம.க.வில் மாற்றம்.. அழைக்கிறார் அன்புமணி ராமதாஸ்! Anbumani Ramadoss

பா.ம.க.வில் மாற்றம்.. அழைக்கிறார் அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி கிளை, ஒன்றிய, மாவட்ட அளவில் மறுசீரமைப்புக்கு தயாராகிறது….

பல்கலைக்கழக வேந்தர் முதலமைச்சர்தான்.. அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

பல்கலைக்கழக வேந்தர் முதலமைச்சர்தான்.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: “பல்கலை. வேந்தர் முதலமைச்சர் தான். உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது. துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை தேவை” என…

சந்தர்ப்பவாத அரசியல்.. மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதீர்.. கண்டித்த அன்புமணி! Anbumani Ramadoss

சந்தர்ப்பவாத அரசியல்.. மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதீர்.. கண்டித்த அன்புமணி!

Anbumani Ramadoss: “பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது; அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com