மீனவர்கள் மீது அடக்குமுறை; அக்.8 இலங்கை தூதரகம் முற்றுகை: பா.ம.க அறிவிப்பு

PMK Sri Lanka embassy blockade protest | மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து பாமக சார்பில் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

Published on: October 3, 2024 at 10:57 am

Updated on: October 3, 2024 at 10:59 am

PMK Sri Lanka embassy blockade protest | பாமக சார்பில் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சிங்களக் கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து மீனவர்களுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது.

அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்” எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து, “முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி – பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

ஓரணியில் அன்புமணி-ராமதாஸ்.. என்ன செய்யப் போகிறார் எம்.எல்.ஏ அருள்? PMK MLA Meeting

ஓரணியில் அன்புமணி-ராமதாஸ்.. என்ன செய்யப் போகிறார் எம்.எல்.ஏ அருள்?

PMK MLA Meeting : பா.ம.க. எம்.எல்.ஏ அருள் வியாழக்கிழமை (ஜூலை 16, 2026) காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்….

நாகர்கோவில் சிறை மரண வழக்கு… சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் CBI PROBE DEMAND

நாகர்கோவில் சிறை மரண வழக்கு… சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – அன்புமணி

CBI PROBE DEMAND: நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

700 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்கள் பறிபோகின்றன.. 6 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தேவை.. அன்புமணி ராமதாஸ் Anbumani Warns on MBBS Seats

700 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்கள் பறிபோகின்றன.. 6 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள்

Anbumani Warns on MBBS Seats : “700 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்கள் பறிபோகின்றன” என எச்சரித்துள்ள அன்புமணி ராமதாஸ், “6 புதிய அரசு மருத்துவக்…

சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கம் சிதைக்கப்படும் அபாயம்.. அன்புமணி ராமதாஸ் Anbumani Raises Caste Census Concern

சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கம் சிதைக்கப்படும் அபாயம்.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Raises Caste Census Concern : சாதிவாரி கணக்கெடுப்பு நோக்கமே சிதைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

உழவர் சாவு வேதனை.. பயிர்க்கடனை முழுமையான தள்ளுபடி செய்க.. அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

உழவர் சாவு வேதனை.. பயிர்க்கடனை முழுமையான தள்ளுபடி செய்க.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : “முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com