Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் குறைந்தது நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி காயமடைந்தனர்.
குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சார் பகுதியில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கூடுதல் எஸ்பி (போக்குவரத்து) மும்தாஜ் அலி காயமுற்றார். மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர். சம்பவ பகுதியில் பாதுகாப்பு படை வீர்ரகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :
Forest Fires in Rajouri : ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்ட காட்டில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது….
Jammu Kashmir: பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சர்வதேச எல்லையை கடந்ததைத் தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீரின் சாம்பா
பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது….
Kamal Singh Jamwal: “20 ஆண்டுகளாக பாரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன்” என துப்பாக்கி ஆயுததாரி கமல் சிங் ஜாம்வால் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
6th National Rafting Championship : 6வது தேசிய ராஃப்டிங் சாம்பியன்ஷிப் ‘தி அல்டிமேட் ரிவர் பேட்டில்’ டோடா மாவட்டம், ஷிப்னோட்டில் தொடங்கியது….
Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்