அகமதாபாத், ஜூலை 31, 2026: குஜராத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாநில நிர்வாகம் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று மத்திய மற்றும் தென் குஜராத்தைச் சேர்ந்த அகமதாபாத், ஆனந்த், சூரத், நவ்சாரி, வல்சாட் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
கனமழை முன்னெச்சரிக்கையாக அகமதாபாத், நவ்சாரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான மற்றும் வெள்ள அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு உடனடியாக மாற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 1 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லக் கூடாது என வானிலை ஆய்வு மையம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமித் ஷா எங்கே? தங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா? கார்கே ஆவேசம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்