அமித் ஷா எங்கே? தங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா? கார்கே ஆவேசம்!

Mallikarjun Kharge: “உங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா?” என மக்களவையில் மல்லிகார்ஜூன் கார்கே ஆவேசமாக பேசினார்.

Published on: July 30, 2026 at 4:13 pm

புதுடெல்லி, ஜூலை 30, 2026: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்காததும், போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மௌனம் காத்திருப்பதையும் எதிர்த்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார். “உங்கள் வாயை யாராவது தைத்துவிட்டார்களா?” என்ற கேள்வியுடன் அவர் தனது பேச்சை தொடங்கினார்.

ஜூலை 20 அன்று நடைபெற்ற ‘சலோ சன்சத்’ பேரணியின் போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் கடுமையான ஒடுக்குமுறையை மேற்கொண்டதாகக் கூறிய கார்கே, உள்துறை அமைச்சர் இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காதது ஜனநாயகத்திற்கு எதிரானது என வலியுறுத்தினார்.

அவர் மேலும், “கிராமங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வந்த குழந்தைகள் மீது பெல்லட் துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். ஒருவர் கண்ணை இழந்துள்ளார், மற்றொருவர் காதை இழந்துள்ளார், வேறொருவர் கையை இழந்துள்ளார். இதற்கு யார் பொறுப்பு? உள்துறை அமைச்சர் தான் பொறுப்பு,” என்று கூறினார்.

இந்தக் கருத்துகள் அவையில் பாஜக எம்.பிக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. அவர்கள் கார்கேவின் பேச்சு “நாடாளுமன்ற மரபுக்கு ஒவ்வாதது” என்று சுட்டிக்காட்டினர். ஆனால் கார்கே, தனது பேச்சு மரபுக்கு எதிரானதல்ல என்றும், ‘ஜனசக்தி’ (மக்கள் சக்தி) தான் உள்துறை அமைச்சரை பதிலளிக்க வைக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.

காங்கிரஸ் தொடர்ந்து அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்காதது குறித்தும், ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட ‘கடுமையான வன்முறை’ குறித்தும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், கார்கேவின் இந்தக் கடுமையான விமர்சனம் அரசியல் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மேகதாது அணை விவகாரம்: கர்நாடகாவின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com