IPS Trainee Wanted in Telangana : பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டுவரும் ஐ.பி.எஸ் அதிகாரி மாயமானார்.
IPS Trainee Wanted in Telangana : பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டுவரும் ஐ.பி.எஸ் அதிகாரி மாயமானார்.

Published on: July 28, 2026 at 11:40 am
ஹைதராபாத், ஜூலை 28, 2026: தெலங்கானாவில் பயிற்சி பெறும் ஐபிஎஸ் அதிகாரி முலகனி உதய கிருஷ்ண ரெட்டி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. ஜூலை 22 அன்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்த முகவரிகளில் எங்கும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது கைபேசியும் அணைக்கப்பட்டிருப்பதால், இருப்பிடத்தை அறிய காவல்துறை விரிவான தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
ஜூலை 19 அன்று, 30 வயதான பெண் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், அட்டாபூர் காவல் நிலையத்தில் ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சம்ஹிதா (BNS) பிரிவுகள் 74, 75, 77, 78, 79, 127(2), 115(2), 351(2) ஆகியவற்றுடன், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் 66E மற்றும் 67A பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டது.
முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், சர்தார் வல்லபாய் தேசிய காவல்துறை அகாதமி அவரை பயிற்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது. புகார் அளித்த பெண் அதிகாரியின் வாக்குமூலம் மூத்த காவல்துறை மற்றும் அகாடமி அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட மறுநாள், உதய் ரெட்டி அளவுக்கு அதிகமாக மது அருந்தி சுயநினைவை இழந்ததாகவும், தற்கொலை முயற்சி என சந்தேகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரது சகோதரரும் நண்பர்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தற்போது, இன்ஸ்பெக்டர் ஜோத்ஸ்னா தலைமையில், ஷீ டீம்ஸ் டிசிபி லாவண்யா நாயக் ஜாதவின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை, அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்ய தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இதையும் படிங்க : டெல்லி மாணவர்கள் மீது தடியடி.. உச்ச நீதிமன்றம் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com