Yuvraj Singh: ஒவ்வொரு குழந்தைக்கும் அமைதியான கற்றல் உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ள யுவராஜ் சிங், டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிட் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Yuvraj Singh: ஒவ்வொரு குழந்தைக்கும் அமைதியான கற்றல் உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ள யுவராஜ் சிங், டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிட் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Published on: July 23, 2026 at 7:21 pm
புதுடெல்லி, ஜூலை 23, 2026: டெல்லியில் CJP போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமூக ஊடகங்கள் வாயிலாக உணர்வுப்பூர்வமான வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். கனமழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகரில் திரண்டதால், மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய ‘சலோ சன்சத்’ பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆனால், போலீசார் நுழைவுப் பாதைகளை மறித்ததுடன், ஜந்தர் மந்தரில் நடைபெறும் முக்கியப் போராட்டத்தில் இணைய வந்தவர்களை அனுமதிக்கவில்லை. போராட்டக்காரர்களைக் கையாள்வதில் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை வீச்சு போன்ற வன்முறைகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், யுவராஜ் சிங், “ஒவ்வொரு குழந்தைக்கும், மாணவருக்கும், பெண்ணுக்கும் மற்றும் ஆணிற்கும் அமைதியான சூழலில் கற்கவும், பாதுகாப்பான முறையில் வளரவும் உரிமை உண்டு. இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் நாம் ஒரு சுமூகமான தீர்வைக் காண முடியும்” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அவர், அரசும் போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போலீஸ் நடவடிக்கையின்போது குறைந்தது 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த மேடைகள் மற்றும் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இருப்பினும், போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்து தொடர்ந்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு CJP வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க : சர்வதேச பேட்ஸ்மேன்கள் தரவரிசை.. ரோஹித், கோலி நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com