மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

Perambur MLA Office : பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்துவைத்தார்.

Published on: July 13, 2026 at 6:55 pm

சென்னை, ஜூலை 13, 2026 : முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சட்டமன்றத் தேர்தலில் தக்கவைத்துக் கொண்ட பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் அதிகாரப்பூர்வ தொகுதி பயணமாக சென்று ஷர்மா நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார். இந்த அலுவலகம் பொதுமக்கள் நேரடியாக மனுக்களை அளிக்கும் வசதியுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதே வளாகத்தில் இ-சேவை மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், பெரம்பூர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தினார். குடிநீர், மின்சாரம், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட குடிமைப் பிரச்சினைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்து, அவற்றின் நிலையை மக்கள் நேரடியாகக் கண்காணிக்கும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் மாநிலத் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதல் கட்டமாக குடும்ப அட்டைகளை வழங்கினார்.

பின்னர், பொதுமக்களுடன் கலந்துரையாடி, தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்தார். இது பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சராக விஜய் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பு நிகழ்வாகும். நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்கள்.. சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம்.. முழு விவரம்!

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு! MRK Panneerselvam

சொத்துக் குவிப்பு வழக்கு.. நேரில் ஆஜராவதில் இருந்து எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு விலக்கு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com