விண்ணில் பாய தயாராகும் கிரஹா சோலாராஸ் செயற்கைகோள்.. விக்ரம்-1 ராக்கெட் ரெடி.. முழு விவரம்!

Vikram-1 : இந்திய விண்வெளித்துறையின் மைல்கல்லாக, கிரஹா சோலாராஸ் செயற்கைகோள் விக்ரம்-1 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

Published on: July 10, 2026 at 5:47 pm

சென்னை, ஜூலை 10, 2026: இன்று இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, கிரஹா ஸ்பேஸ் நிறுவனம் தனது சோதனை நானோ செயற்கைக்கோள் சோலாராஸ் (SOLARAS)-ஐ ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தத் தயாராகியுள்ளது.

இந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இதன் மூலம், கிரஹா ஸ்பேஸ் நிறுவனம் தனது நானோ செயற்கைக்கோளை பூமியின் தாழ் வட்டப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தி, எதிர்கால திட்டங்களுக்கு தேவையான மின்னணுவியல் கூறுகள் மற்றும் துணை அமைப்புகளை சோதனை செய்யும் வாய்ப்பைப் பெறுகிறது.

மேலும், விஐடி பல்கலைக்கழகம் உருவாக்கிய விஸ்வா-எம் (VISWA-M) என்ற கல்வி ஆராய்ச்சி கருவி, சூரிய கதிர்வீச்சை கண்காணிக்க இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன், பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான கருவிகளை தாங்கிச் செல்லும் திறனை நிரூபிக்கவும் இத்திட்டம் உதவுகிறது.

கிரஹா ஸ்பேஸ் நிறுவனம், குறைந்த செலவில் எளிய முறையில் விண்வெளித் தரவுகளைப் பெறுவதன் மூலம் விவசாயம், பேரிடர் மேலாண்மை, காலநிலை கண்காணிப்பு மற்றும் வணிக பயன்பாடுகள் ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே தங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் குமார், “இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை புதுமை, ஒத்துழைப்பு மற்றும் உலகத் தரமான திறன்களை உருவாக்கும் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. விக்ரம்-1 போன்ற உள்நாட்டு ராக்கெட் திட்டங்கள், வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களை நிரூபிக்கவும் புதுமையை விரைவுபடுத்தவும் பெரும் வாய்ப்புகளை வழங்குகின்றன” எனக் கூறினார்.

சென்னை மற்றும் பெங்களூருவில் இயங்கும் கிரஹா ஸ்பேஸ், StartupTN மற்றும் Forge Innovation & Ventures ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இதனுடன், தமிழ்நாடு அரசு விண்வெளித் தொழில் கொள்கை 2025-ஐ அறிமுகப்படுத்தி, மாநிலத்தை விண்வெளி தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தித் துறையில் முன்னணி மையமாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கொள்கையின் மூலம் ₹10,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, உயர்திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரயில் விபத்தில் யானைகளை பாதுகாக்க ஏ.ஐ தொழில்நுட்பம்.. இந்திய ரயில்வே அறிமுகம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com