இலங்கை அதிபர் தேர்தல்: யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கிறார்.

Published on: September 22, 2024 at 10:50 am

Sri Lanka presidential election | இலங்கையின் புதிய அதிபராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் அதிபர் தேர்தலில் தனது முன்னிலையை உறுதிப்படுத்தி வருகிறார்.
அதாவது, இலங்கை தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட ஒரு மில்லியன் வாக்குகளில் சுமார் 53% வாக்குகளை அவர் வென்றுள்ளார் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தரவுகள் மேலும் தெரிவித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22, 2024) காலை 7 மணி நிலவரப்படி மொத்த வாக்கு எண்ணிக்கையில், 56 வயதான திசாநாயக்க, 727,000 (52%) வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது நெருங்கிய போட்டியாளரான 57 வயதான சஜித் பிரேமதாச, 333,000 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இது, 23 சதவீதம் ஆகும். 75 வயதான தற்போதைய ரணில் விக்கிரமசிங்க 16% வாக்குகளுடன் 235,000 வாக்குகளைப் பெற்று பின்தங்கியுள்ளார். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு அங்கு நடைபெறும் முக்கியமான எதிர்க்கட்சி தேர்தல் இதுவாகும்.

இதையும் படிங்க : ‘ஓவர் டைம், பிஸினஸ் ட்ரிப்’; 58 ஆண்களுடன் சல்லாபம்: பெண் கவர்னர் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com