தமிழ் அறிவை ஊட்டும் நிகழ்ச்சி: தமிழோடு விளையாடு சீசன் 2!

Tamilodhu vilaiyadu | தமிழ் அறிவை ஊட்டும் “தமிழோடு விளையாடு சீசன் 2” செப்டம்பர் 22 முதல் கலைஞர் டிவியில் ஆரம்பமாகிறது.

Published on: September 20, 2024 at 8:18 am

Tamilodhu vilaiyadu | கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “தமிழோடு விளையாடு” முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் செப்டம்பர் 22-ந் தேதி முதல் ஞாயிறு தோறும் மாலை 6.00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தவிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளுடன் பிரமாண்டமாக உருவாகிறது. தமிழகம் முழுவதும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளியில் இருந்து மாணவ- மாணவிகள் இந்த சீசனில் பங்கேற்று அசத்துகின்றனர். ஞாயிறுதோறும் மாலை 6.00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை கண்டு களியுங்கள்.

இதையும் படிங்க : ‘சன்னி லியோனிடம் பேச முடியல; இதுக்காகவே இந்தி கத்துக்கணும்’: இயக்குனர் பேரரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com