‘ஒரே நாடு ஒரே தேர்தல் மக்கள், நாட்டு நலன்; போலித் தகவல்களை நம்ப வேண்டாம்’: சரத் குமார்

Sarath Kumar | “ஒரே நாடு ஒரே தேர்தல் மக்கள் நலன் மற்றும் நாட்டு நலன் தொடர்புடையது; போலித் தகவல்களை நம்ப வேண்டாம்” என நடிகர் சரத் குமார் கூறியுள்ளார்.

Published on: September 20, 2024 at 12:04 am

Sarath Kumar | ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, நடிகர் சரத் குமார் விடுத்துள்ள அறிககையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிறப்பான செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட சாத்தியக்கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்கிறேன். இது தொடர்பாக முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
பாரதம் குடியரசு நாடான பிறகு நடைபெற்ற முதல் நான்கு தேர்தல்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியை அடிப்படையாகக் கொண்டவைதான்.

ஆனால், பல அரசியல் காரணங்களுக்காக சில மாநில அரசுகள் இந்த தேர்தல் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கலாம்.ஒரே நாடு, ஒரே தேர்தல் வாயிலாக மாநில உரிமைகள் பறிக்கப்படும் என பொதுவான ஐயங்கள் மாநில அரசுகளுக்கு எழுந்தாலும், இரு தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் செலவினங்களை குறைக்க இந்த நடைமுறை உதவும்.

ஒவ்வொரு ஐந்தாறு மாத இடைவெளிகளில் ஏதாவது தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டே இருப்பதால், தேர்தல் விதிமுறைகள் காரணமாக மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைய கால தாமதம் ஏற்படுகிறது என்பது முக்கிய காரணம். இது குறித்து விரிவான விளக்கம் அளித்து மாநில அரசுகள் மற்றும் மக்களின் சந்தேகங்களுக்கு, மத்திய அரசின் உயர்மட்டக் குழு கண்டிப்பாக பதில் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்கள் நலன், நாட்டு நலன் என அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல் செயல்முறை என்ற அடிப்படையில், போலி தகவல்களை நம்பாமல் மக்கள் சுயமாக சிந்தித்து தங்கள் கருத்துகளை கருத்து கேட்பின் போது பதிவு செய்து, கட்சிப்பாகுபாடின்றி மக்கள் இந்த தேர்தல் செயல்முறையை வரவேற்பார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :  ‘ஒரே நாடு ஒரே தேர்தல் ஒருபோதும் செயல்படுத்த முடியாது’: மு.க ஸ்டாலின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com