Dr Ramadoss: கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதா என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
Dr Ramadoss: கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதா என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: May 25, 2026 at 2:13 pm
சென்னை, மே 25, 2026: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (மே 25, 2026) விடுத்துள்ள அறிக்கையில், “ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களிலும் இந்தியாவில் அதற்கேற்ப விலை குறைக்கப்படவில்லை என்பது மக்களிடையே நீண்டநாள் குற்றச்சாட்டாக உள்ளது.
மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வரி வசூல் மற்றும் லாப நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி மக்களின் நலனை புறக்கணிக்கின்றன என்ற உணர்வு வலுப்பெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான மத்திய மற்றும் மாநில வரிகள் மொத்த விலையின் பெரிய பகுதியை நிர்ணயிப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் விவசாயிகள், சிறு தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விவசாய உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதோடு, பொதுப் போக்குவரத்து கட்டண உயர்விற்கும் இந்த நிலை வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
எனவே,
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் எரிபொருள் விலை உயர்வை அரசு அலட்சியமாக பார்க்காமல் உடனடியாக தலையிட்டு விலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் தீவிரமடையும். ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விஜய் முதல்வராவதை உதயநிதி தடுத்தார்.. மாணிக்கம் தாகூர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com