Kerala | கேரளத்தில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மது அருந்த கொடுத்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Kerala | கேரளத்தில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மது அருந்த கொடுத்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: September 18, 2024 at 9:53 pm
Kerala | கேரள மாநிலம், பூச்சக்கல் அருகே பள்ளிச்சந்தையில் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு மது வழங்கியதாக 6 பேர் மீது சேர்த்தலா கலால் வட்ட அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், கடை ஊழியர்கள் பள்ளிச்சந்தா கே மனோகரன், மேலாளர் மோகனன் மற்றும் உரிமதாரர்கள் சந்திரப்பன், ரமா தேவி, அசோகன் மற்றும் எஸ் ஸ்ரீகுமார் ஆகியோர் மீது அப்காரி சட்டம் 56ஜி15ஜி இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பள்ளிச்சந்தா அருகே உள்ள பள்ளியில் ஓணம் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்துள்ளது. 7ஆம் வகுப்பு படிக்கும் ஏழு மாணவர்கள் கடைக்கு சென்று இரண்டு பாட்டில் மது வாங்கினர். பின்னர், பள்ளிப்புரம் கோயில் அருகே உள்ள புதரில் வைத்து மதுவின் ஒரு பகுதியை குடித்துவிட்டு, மீதியை பையில் வைத்திருந்தனர். மீதமுள்ள பகுதியை பள்ளி கழிவறையில் வைத்து குடித்துள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில், ஒரு மாணவர் வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளார். தகவல் அறிந்து, பெற்றோர் அவரை துறைவூர் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரது உடல்நிலை மோசமானதன் காரணமாக, ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், திங்கள்கிழமை, மாணவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து கலால் துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 14-ம் தேதி கலால் கமிஷனரிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த நிலையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :தொண்டையில் சிக்கிய இட்லி; கேரளத்தில் போட்டியாளருக்கு நேர்ந்த பரிதாபம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com