Riva Arora: நடிகை ரிவா அரோரா, ப்ளிங்கிட் டெலிவரி ஏஜெண்ட் தொந்தரவு அளித்ததாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
Riva Arora: நடிகை ரிவா அரோரா, ப்ளிங்கிட் டெலிவரி ஏஜெண்ட் தொந்தரவு அளித்ததாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Published on: May 8, 2026 at 12:05 pm
மும்பை, மே 8, 2026: நடிகை ரிவா அரோரா, ப்ளிங்கிட் டெலிவரி ஏஜெண்ட் ஒருவரால் தொந்தரவுக்கு ஆளானதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் மும்பையில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ரிவா அரோரா நேரடியாக மும்பை போலீசை அணுகி புகார் அளித்தார். போலீசார், புகாரை பதிவு செய்து, சம்பவம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மும்பை போலீசில் புகார்
இது தொடர்பாக, மும்பை போலீசார் கூறுகையில், “புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. குற்றவாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இந்த சம்பவம், டெலிவரி சேவைகள், வாடிக்கையாளர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க : சேயோன் சிவகார்த்திகேயன் ஜோடி இவரா? யார் இந்த பாக்யஸ்ரீ?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com