அமெரிக்காவில் இருந்து நாடு திரும்புங்கள்.. பாரத மாதாவுக்கு நீங்கள் தேவை.. ஸோகோ ஸ்ரீதர் வேம்பு!

Zoho : அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ஸோகோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பாரத மாதாவுக்கு நீங்கள் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published on: April 28, 2026 at 9:49 pm

Updated on: April 28, 2026 at 9:52 pm

சென்னை, ஏப்.28, 2026: உலகம் முழுவதும் குடியேற்றம், வேலைவாய்ப்புகள் மற்றும் அடையாளம் சார்ந்த உரையாடல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த நிலையில், ஸோகோ ஸ்ரீதர் வேம்பு, “அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என அழைப்பு” விடுத்துள்ளார்.

தாயகம் திரும்புங்கள்

இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு ‘ட்விட்டர் எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார். அதில், “அன்பான பாரத சகோதர- சகோதரிகளே..!

நான் 37 ஆண்டுகளுக்கு முன் செய்தது போல, நீங்கள் பணமின்றி ஆனால் நல்ல கல்வி மற்றும் பாரதத்தின் பண்பாட்டு மரபுடன் அமெரிக்கா வந்தீர்கள். அங்கு சிறப்பான வெற்றியை அடைந்தீர்கள். அமெரிக்கா நமக்கு நல்லது செய்தது, அதற்காக நன்றி செலுத்த வேண்டும் – நன்றி கூறுவது பாரதிய வழி.

இன்று, பல அமெரிக்கர்கள் இந்தியர்கள் வேலைகளை பறிக்கிறார்கள் என்று நம்புகின்றனர். அடுத்த தேர்தல் இதை சரி செய்யும் என்று நினைக்க வேண்டாம்; அது “hard right” மற்றும் “woke left” இடையேயான போராட்டம். அதில் நீங்கள் பக்கவாட்டில் நிற்கும் பார்வையாளர்கள் மட்டுமே.

உலகளவில் இந்தியர்களுக்கு கிடைக்கும் மரியாதை, இந்தியாவின் நிலைமையைப் பொறுத்தே இருக்கும். இந்தியா ஏழையாக இருந்தால், இடதுசாரிகள் இரக்கம் கலந்த சொற்பொழிவுகளை வழங்குவார்கள்; வலதுசாரிகள் அவமதிப்புடன் பேசுவார்கள். உண்மையான மரியாதை, செழிப்பு மற்றும் பாதுகாப்பு, ஒரு நாட்டின் தொழில்நுட்ப வல்லமையிலிருந்து மட்டுமே வருகிறது. இந்தியா போதுமான திறமையை உருவாக்குகிறது, ஆனால் அதில் பெரும்பகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவிட்டோம்.

எனவே, உங்களின் திறமையை மீண்டும் பாரதத்திற்கு கொண்டு வாருங்கள். பாரத மாதா உங்களை தேடுகிறார். இளைஞர்கள் உங்கள் தொழில்நுட்ப வழிகாட்டுதலை தேவைப்படுகிறார்கள். அதை ஒரு பணி உணர்வுடன் செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை நோக்கிக் கூறப்பட்டுள்ள இவரது செய்தி, வெறும் தொழில் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களை மட்டும் கடந்து நிற்கிறது; அதே சமயம், இந்தச் செய்தி ஆதரவு- எதிர்ப்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஈரானுக்கு கை கொடுக்கும் ரஷ்யா.. அமைதியை மீட்டெடுக்க உறுதி.. விளாடிமிர் புதின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com