Andhra Pradesh High Court: இந்துக் வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மனைவி குழந்தையில்லாமல் இறந்திருந்தாலும், கணவருக்கு அவளது பெற்றோரின் சொத்தில் உரிமை இல்லை என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Andhra Pradesh High Court: இந்துக் வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மனைவி குழந்தையில்லாமல் இறந்திருந்தாலும், கணவருக்கு அவளது பெற்றோரின் சொத்தில் உரிமை இல்லை என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Published on: April 1, 2026 at 5:01 pm
அமராவதி, ஏப்.1, 2026: ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம், வாரிசுரிமை தொடர்பான முக்கிய தீர்ப்பில், மனைவி குழந்தையில்லாமல் இறந்தால், அவள் பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அந்த சொத்து, இந்துக் வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15(2)(a) படி, பெண்ணின் தந்தையின் வாரிசுகளுக்கு திரும்பும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த வழக்கு அனகாப்பள்ளி மாவட்டம் பெண்டகோட்டா கிராமத்தில் உள்ள நிலத் தகராறைச் சார்ந்தது. சிக்கலா வெங்கயம்மா 2002-இல் தனது பேத்தி ஸ்ரீவிரிதாவுக்கு 1.50 ஏக்கர் நிலத்தை பரிசளித்தார். அதன் பெயர் வருவாய் பதிவுகளில் சேர்க்கப்பட்டது. ஸ்ரீவிரிதா, ஸ்ரீராமா தோராவை திருமணம் செய்துகொண்டார், ஆனால் 2005-இல் குழந்தையில்லாமல் இறந்தார்.
பின்னர் வெங்கயம்மா 2007-இல் அந்த பரிசளிப்பு பத்திரத்தை ரத்து செய்து, 2011-இல் மற்றொரு பேத்தி தேவிகா மனசாவுக்கு புதிய பரிசளிப்பு பத்திரம் செய்தார். வெங்கயம்மா 2012-இல் இறந்தபின், 2017-இல் வருவாய் பிரிவு அலுவலர் (ஆர்.டி.ஓ) அந்த நிலத்தை தேவிகாவின் பெயரில் மாற்றினார்.
ஆனால் ஸ்ரீவிரிதாவின் கணவர் இதை எதிர்த்து, 2023-இல் இணை கலெக்டர் ஆர்.டி.ஓ-வின் உத்தரவை ரத்து செய்தார். பதிவு செய்யப்பட்ட பரிசளிப்பு பத்திரத்தை, சிவில் நீதிமன்றத்தை அணுகாமல் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது என்று அவர் கூறினார். இதனால் தேவிகா மனசா மற்றும் அவரது தந்தை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், இந்துக் வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மனைவி குழந்தையில்லாமல் இறந்தால், கணவருக்கு அவளது பெற்றோரின் சொத்தில் உரிமை இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: மக்கள் தொகை கணக்கெடுப்பு.. வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com